இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி பாம்பன் பாலம் முன் போராட்டம்
இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் நேற்று(22) பாம்பன் பாலம் முன்பு வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலுக்கு என்ன நடந்தது..! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்திய பரபரப்பான உண்மைகள்
போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்றொழிலுக்குச் சென்று கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி இலங்கை மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்த 12 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீர்கொழும்பு மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் கடற்றொழிலாளர்கள் 12 பேரும் தொடர்ந்து ஏழாவது முறையாக நீதிமன்ற காவலில் நீடிக்கப்டடு 90 நாட்களுக்கு மேலாக விசாரணை கைதிகளாக இருப்பதால் கடற்றொழிலாளர்களின் வழக்கை துரிதமாக நடத்தி விரைந்து கடற்றொழிலாளர்களையும் படகையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் பாம்பன் பாலத்திற்கு முன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் செல்லும் பிரதான வீதியில் குறித்த குடும்பத்தினர், கடற்றொழில் பிரதிநிதிகள், கடற்றொழிலாsர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொலிஸார் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாம்பன் சாலை பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது
மேலும் தமிழக அமைச்சரவையில் கடற்றொழில் சமுதாயத்தை சேர்ந்த தூத்துக்குடி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளை பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர் விஜய் கடற்றொழிலாளர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் பேசி நல்ல முடிவை பெற்று தர வேண்டும்.
பொலிஸ் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் கடற்றொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக மீளப்பெறுவதாகவும், 27ஆம் திகதி கடற்றொழிலாளர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

