ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கைது செய்யப்பட்டமைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டை நள்ளிரவில் சுற்றிவளைத்துள்ள சி.ஐ.டியினர்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நள்ளிரவில் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில்
வைத்து சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என அடையாளப்படுத்திக்கொண்டுள்ள சிலர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டை சோதனையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.