சீனி கோவிட் கொத்தணி உருவாகும் அபாயம்?
நாட்டில் சீனி கோவிட் கொத்தணி உருவாகும் அபாயம் உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனி தட்டுப்பாடு குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முரத்தட்டுவே ஆனந்த தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாடு முழுவதிலும் தற்பொழுது மக்கள் சீனி பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்க வேண்டியேற்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிலையில் எதிர்வரும் நாட்களில் நாட்டில் சீனிக்காக வரிசையில் காத்திருந்த காரணத்தினால் ஓர் கோவிட் கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுகின்றது என முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சீனிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அரசாங்கம் வர்த்மானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதிலும் உள்ள சதொச நிறுவனங்களின் ஊடாக குறைந்த விலையில் சீனியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
