அமெரிக்கா - ஈரான் போர் மீண்டும் வெடிக்கும்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரானிய மத்திய கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரி முகமது ஜாபர் அசாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தாக்குதல் தொடங்கிய போரில் தற்போது தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது.
பேச்சுவார்த்தை
ஆனால் அணு சக்தி தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுப்பறி இருந்து வருகிறது.மேலும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் இருநாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam