பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களின் விலைகள் உயர்வு
வரவிருக்கும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு உட்படக் கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக, உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வெடிபொருட்கள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு காரணமாகும்.
அவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமான வெடிமருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு, பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பலர் தங்களது தொழில் துறையை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அதிகமானோர் பட்டாசு உட்படக் கேளிக்கை வெடிபொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டனர்.
எனினும் தற்போது ஒரு சிலர் மாத்திரமே இந்த தொழில் துறையை முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறான காரணங்களால் வெடிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam