பிரித்தானியாவில் அதிகரித்துள்ள பதற்ற நிலை : அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷி சுனக்
பிரித்தானியாவில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ரிஷி, தன் மனைவியுடன் அமெரிக்காவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் புலம்பெயர்தலுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுத்து வந்தவரான முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தன் மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் அமெரிக்காவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்குச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஐந்து வார விடுமுறை
குறித்த நட்சத்திர ஹோட்டல், சினிமா நட்சத்திரங்கள் உட்பட, பிரபலங்கள் அடிக்கடி செல்லும் ஒரு ஹோட்டல் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரிஷி குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியமர இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
ஆனால், இப்போது ஐந்து வார விடுமுறைக்காக ரிஷி தன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri