ஈரானில் ஒரே நாளில் 29 பேருக்கு தூக்குத் தண்டனை : எழுந்துள்ள கண்டனம்
ஈரான்(Iran) ஒரே நாளில் 29 பேருக்கு நேற்று(07) தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 26 பேர் ஒரே சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் என்று மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்புகள்
2022ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றியது தொடர்பாக சர்வதேச அமைப்புகளின் கண்டனத்தை எதிர்கொண்ட ஒருநாள் கழித்து இந்த தூக்குத் தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டை தளமாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு வழங்கிய தகவலில், தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களில் 26 பேருக்கு தெஹ்ரானுக்கு வெளியே கராஜில் அமைந்துள்ள கெசல் ஹெசார் (Ghezelhesar) சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், மீதமுள்ள 3 பேருக்கு கராஜ் நகரம் (Karaj's city) சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தூக்கிலிடப்பட்டவர்களில் இரண்டு பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் மீது கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
