ஹிஷாலினியின் தாய் ரிஷாத் வீட்டிலிருந்து தொடர்ச்சியாக பணம் பெற்றுள்ளாரா? வெளியாகியுள்ள தகவல்
ஹிஷாலினி 2020.11.18ஆம் திகதி வேலைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பின், ஐந்து நாட்களுக்கு பிறகு இரண்டு மாத முற்பணமாக நாற்பதாயிரம் ரூபா பணம் அவரது தாயாரால் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டிசம்பர் மாதம் அவரது தாயார் மீண்டும் தொடர்புகொண்டு தமது வீட்டின் கூரை உடைந்துள்ளதாகவும், அதனை சீர்செய்வதற்கு அறுபதாயிரம் ரூபா வரை தேவைப்படுவதாகவும் கூறி அத்தொகையை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
மீண்டும் ஒரு மாதம் கழித்து அவரது மூத்த மகன் நோய்வாயப்பட்டு ஒரு மாத காலமாக படுக்கையில் இருப்பதாகக் கூறி மேலும் நாற்பதாயிரம் ரூபா பணத்தை பெற்றிருக்கிறார்.
மேலும் இந்த பெண் எரி காயத்துக்கு உள்ளாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரும் இன்னொரு தொகை பணத்தை பெற்றுத் தருமாறு தரகரூடாக கோரியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,