வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ரிஷாத் வீட்டில் பணியாற்றிய பெண்
ரிசாத் வீட்டில் பணியாற்றிய மற்றமொரு பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் அந்த பெண் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மரணித்த சிறுமி ஹிஷாலினியை பணிக்கு அமர்த்திய தரகர் மூலம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 11 பெண்களில் மூன்று பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
எரிக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த 16 வயதான ஹிஷாலினியும், புற்று நோய் காரணமாக இன்னுமொரு பெண்ணும், தற்கொலை செய்து கொண்ட மற்றுமொரு பெண்ணுமாக 3 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும், 2019ஆம் ஆண்டு முதல் குறித்த தரகர் ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டப்பட்டுள்ளனர்.
இதுதவிர, ஏனைய 8 பெண்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப்பெண்ணையும், ரிஷாத்தின் மைத்துனர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண், தனது வாக்குமூலத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தற்போது வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த 29 வயதான பெண் 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
