மூன்று மாதங்களில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்
நாட்டில் இன்னும் மூன்று மாதங்களில் கடுமையான அரிசி தட்டுப்பாடு தொடர்பான நெருக்கடி ஏற்படும் என தேசிய கமத்தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கடும் தட்டுப்பாட்டை எதிர்நோக்க போகும் மாகாணங்கள்

நாட்டின் மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அரிசிக்கு கடுமயான தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பயிர் செய்கைக்கு தேவையான இரசாயன பசளைகள் மற்றும் ஏனைய இரசாயனங்கள் கிடைக்காததே இதற்கு பிரதான காரணம்.
இதன் காரணமாக பல மாகாணங்களில் நெல் பயிர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இலஙகைக்கு ஒரு மாத காலத்திற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் மெற்றி தொன் அரிசி தேவைப்படுகிறது.
எனினும் அரச நெற் களஞ்சியங்களில் ஒரு மெற்றி தொன்னுக்கும் குறைவான நெல்லே இருக்கின்றது. கமத்தொழிலாளர்கள் தமது பயன்பாட்டுக்காக மூன்று லட்சம் மெற்றி தொன் நெல்லை தம்வசம் வைத்துள்ளனர்.
80 வீதமானவர்களுக்கு அரிசி கிடைக்காமல் போகலாம்

மிகப் பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மேலும் 10 லட்சம் மெற்றி தொன் அரிசியை வைத்துள்ளனர். இந்த தொகையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும்.
சிறு போக பயிர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி செய்யப்படும் நெல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானனோருக்கே போதுமானதாக இருக்கும்.
இதனால், மீதமுள்ள 80 வீதமான மக்களுக்கு அரிசி கிடைப்பது பாரதூரமான சிக்கலாக இருக்கும் எனவும் அனுராத தென்னகோன் கூறியுள்ளார்.
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan