சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு! விலை அதிகரிக்கும் சாத்தியம்
சந்தையில் தட்டுப்பாடாக உள்ள சம்பா, கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் சிறு மற்றும் குறு அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் கைவசம் இருந்த சம்பா, கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசியை சந்தைக்கு விடுவித்துள்ளனர்.
அரிசிக்குத் தட்டுப்பாடு
எனினும் பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் வசம் இருக்கும் சம்பா, கீரி சம்பா, சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றை தொடர்ந்தும் பதுக்கி வைத்துக் கொண்டுள்ளதுடன், அவற்றின் விலையை அதிகரிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் நாட்களில் சந்தையில் அரிசிக்குச் செயற்கையான தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்தி அதன் பின்னர் அரிசி விலையை அதிகரிப்பதற்கு பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.