அரிசிக்கு நிர்ணய விலை: மீறினால் சட்ட நடவடிக்கை
அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை குறைக்குமாறு அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார(Anura Kumara Dissanayake) பணிப்புரை விடுத்துள்ளார்.
அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் உன்னிப்பாக செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடை முறைப்படுத்துமாறும் நுகர்வோர் அதிகார சபைக்கு அவர் அறிவித்துள்ளார்.
அரிசியின் விலை
அதன்படி அரிசியின் விலை பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டு அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.225 ஆகவும், சில்லறை விலை ரூ.230 ஆகவும் உள்ளது.
ஒரு கிலோ வெள்ளை வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகவும் சில்லறை விலை 220 ரூபாவாகவும் உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாவாகும்.
ஒரு கிலோ சம்பா அரிசியின் மொத்த விலை ரூ.235 ஆகவும், சில்லறை விலை ரூ.240 ஆகவும் உள்ளது. ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் மொத்த விலை 255 ரூபாயாகவும் சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam