கிளர்ச்சிகளை ஒடுக்குமுறை மூலமே அடக்க முடியும்: நாமல் ராஜபக்ச
கிளர்ச்சிகள் உருவானால், அவற்றை ஒடுக்குமுறை மூலம் மாத்திரமே அடக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் சிறந்த பணிகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கூடியளவில் ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு முழுமையான ஒத்துழைப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் சிறந்த அரசாங்கத்தை அமைத்து திட்டங்களை முன்னெடுத்து, நாட்டு மக்களின் தேவை பூர்த்தி செய்ய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
சர்வகட்சி அரசாங்கத்திற்கான சூழலை ஏற்படுத்தவே கோட்டாபய பதவி விலகினார்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் சூழலை உருவாக்கவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார். இதற்கான சூழலை ஏற்படுத்த மகிந்த ராஜபக்சவும் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரினர். கோட்டாபய விலகிய பின்னர் அடுத்த திட்டம் என்ன என்ற புரிதல் இவர்களுக்கு இருக்கவில்லை.
கோட்டாபய பதவி விலகினார், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார். தற்போது அவரது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
கிளர்ச்சி உருவானால், அதனை ஒடுக்குமுறை மூலம் மட்டுமே அடக்க முடியும் எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
மேலதிக தகவல் - ராஷே்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 13 மணி நேரம் முன்

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri
