கிவுல் ஓயா திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள் : சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு

Vavuniya Northern Province of Sri Lanka Pathmanathan Sathiyalingam
By Shan Feb 10, 2026 03:52 AM GMT
Report

கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாக மீளாய்வு செய்து, எமது மக்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்படவேண்டும். இல்லையேல் இத்திட்டத்தை செயற்படுத்தவோ நடைமுறைப்படுத்தவோ நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதோ, விடப்போவதோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று நேற்றையதினம்(09.02.2025) மணலாறு பகுதியில் உள்ள மகாவலி அதிகாரசபையின் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடு சென்ற தாயை பழிவாங்க மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

வெளிநாடு சென்ற தாயை பழிவாங்க மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை

மேலும் தெரிவிக்கையில், கிவுல் ஓயா திட்டமானது 1983இல் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட முயற்சிக்கப்பட்டபோதும் அது கிடப்பில் போடப்பட்டது. அதாவது குறித்த பகுதியில் இதுவரை ஒரு போகம் விவசாயம் செய்யும் விவசாயிகள் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் இரண்டு போகம் விவசாயம் செய்யும் நிலையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாக காணப்பட்டது.

கிவுல் ஓயா திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள் : சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு | Review The Kivul Oya Project Sathyalingam Mp

இந்த திட்டத்தில் பயனடையும் தரப்பினர் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிம்பிலிவெவ பகுதியில் 37 வீடுகள் நீருக்குள் மூழ்குகின்றமை உள்ளிட்ட பயனடையும் தரப்பினர் தொடர்பான விடயங்களே தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும், கிவுலு ஓயா நீர்தேக்கத்தின் நீரேந்து பகுதிக்குள் அகப்பட்டு பாதிக்கப்படும் வவுனியா வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலமான வெடிவைத்தகல், மருதோடை ஆகிய தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்பில் எதிவித விடயங்களும் இத்திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்படவில்லை என குற்றம் சாட்டினார். 

2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 வருடங்களாக இரகசியமாக செய்யப்பட்ட இத்திட்டம் பற்றி தற்போது தான் மகாவலி அதிகாரசபை பகிரங்கமாக முதல் கலந்துரையாடலை செய்கின்றமை பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். அத்துடன் இக்கூட்டத்திற்கு கூட திட்டத்தால் பயன்பெறும் மக்களையும், தரப்பினரையும் அழைத்துள்ளீர்களே தவிர திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களையோ, தரப்பினரையோ அழைக்கவில்லையே. ஏன் இந்த பாரபட்சம் எனவும் கேள்வியெழுப்பினார். 

மகிந்த ராஜபக்ச அரசினால் 

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் 2330 ஹக்டயர் நிலம் நீருக்குள் மூழ்கும் என மகாவலி அதிகாரசபையால் சொல்லப்பட்டாலும், அவர்கள் சொன்னதைவிட மிக அதிகளவிலான அளவு நிலம் நீருக்குள் மூழ்கும் நிலை உள்ளது.

இதுபற்றி அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. நீர்த்தேக்கத்திற்காக காடுகளை அழிப்பதால் யானை - மனித மோதல் அதிகரிக்குமென இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள் : சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு | Review The Kivul Oya Project Sathyalingam Mp

அவ்வாறான நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும், தீர்வுகளும் பயனடையும் தரப்பினருக்கே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பாதிப்படையும் தரப்பினருக்கானது பற்றி குறிப்பிடப்படவில்லை.

நீரேந்து பகுதிகள் ஊடாக தமிழ் மக்கள் வாழும் இடங்களை நோக்கியே யானைகள் செல்லும் நிலை ஏற்படுமென்பதுடன் அவர்களே இதனால் அதிக பாதிப்புக்களை எதிர்கொள்வார்கள். 

இத்திட்டமானது 2011ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசினால் வவுனியா வடக்கில் வாழும் மக்களைப்பற்றி கருத்தில்கொள்ளாமல் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். அதே திட்டத்தை இந்த அரசாங்கமும் மீளாய்வு ஏதும் செய்யாமல், எமது மக்களுடன் கலந்துரையாடாமல் நடைமுறைப்படுத்த முயல்வது இந்த அரசும் முன்னைய அரசாங்கங்கள் போல்தான் எனும் மனநிலையை எங்கள் மத்தியில் உருவாக்குகின்றது.

ஆகவே தயவுசெய்து இத்திட்டத்தை உடனடியாக மீளாய்வு செய்து, எமது மக்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையடப்படவேண்டும். இல்லையேல் இத்திட்டத்தை செயற்படுத்தவோ நடைமுறைப்படுத்தவோ நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதோ, விடப்போவதோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US