தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை : சட்ட மூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்
ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சட்ட மூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா(Mahinda Yapa Abeywardena) அபேவர்தன இன்று கையொப்பமிட்டுள்ளார்.
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக உயர்த்தும் சட்ட மூலம் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதுவரை காலமும் தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் ஓர் நிச்சயமான வரையறை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 11ம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சட்டம் இன்றைய தினம் முதல் அமுலுக்கு வருகின்றது.
இதன்படி, 2021 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியச் சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க பணிநீக்கம் (சிறப்பு உத்தரவுகள்) (திருத்தம்) சட்டங்கள் இன்று (17) முதல் அமுலுக்கு வரும்.