சாய்ந்தமருதில் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் உணவகங்கள்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்போது மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதுடன் அவை பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவ்விடத்திலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
தொடர் பரிசோதனைகள்
பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது தொடர்பில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அறிவித்துள்ளார்.
மேலும் மேற்குறித்த பரிசோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீன் வழிகாட்டுதலின் பேரில் நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






