திருடர்களை பிடிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்படும்: சரத் பொன்சேகா - செய்திகளின் தொகுப்பு
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
தலையீடு இல்லாமல் பணியை செய்ய அனுமதித்தால், பணியை செய்து மக்கள் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தும் சூழலை உருவாக்குவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,