மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்

Mannar Government Of Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakesh Aug 08, 2025 02:55 PM GMT
Report

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சில் ஈடுபடுபதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது.

இஸ்ரேலை தாக்கிய தமிழ் இளைஞர்கள்...தேடிச் சென்று பழிதீர்த்த மொசாட்

இஸ்ரேலை தாக்கிய தமிழ் இளைஞர்கள்...தேடிச் சென்று பழிதீர்த்த மொசாட்

தீர்மானம் எடுக்கப்பட்டது

இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல்வேறு தரப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தின் போது மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தால் மன்னார் மாவட்ட மனித மற்றும் இயற்கை வாழிடங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

திட்டத்தின் ஆரம்பப் பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மன்னார் மாவட்ட சிவில் பிரஜைகள் இதன்போது எடுத்துரைத்தனர். காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் குறித்து சகல தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கும், அதுவரையில் இந்தத் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கும் மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இந்த விடயம் குறித்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

மின்னுற்பத்தித் திட்டப் பணிகளுக்கான பொருத்தல் உபகரணங்களை மன்னார் தீவுக்குள் கொண்டு செல்லாமல் அவற்றைப் பிறிதொரு இடத்தில் பாதுகாப்பாக வைப்பற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.  

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

இதேவேளை, காற்றாலை அமைத்தல் தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை(7) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை(8) பிற்பகல் மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் | Resolution To Suspend Mannar Wind Farm Project

குறித்த ஊடக சந்திப்பில், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார், கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதி என்.எம்.ஆலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சிவகரன், 

“நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிக்க கூடிய எந்த வாய்ப்பும் அங்கு கிடைக்கவில்லை.

முடிவு எட்டப்படவில்லை

வருகை தந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் எமது கருத்துக்கு முக்கியத்துவம் வழங்கி செவிமடுக்கவும் இல்லை. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதையே அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தினார்களே தவிர பாதிப்புக்கள் சம்மந்தமாகவோ அல்லது மக்கள் தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதையோ அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

மின்சார சபையினுடைய நிறைவேற்று அதிகாரிகள் உண்மைக்கு மாறான தகவல்களையும், பொய்யான விடயங்களையும் அக்கூட்டத்தில் முன்வைக்க முயன்றார்கள்.

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் | Resolution To Suspend Mannar Wind Farm Project

அதனை நாங்கள் முழுமையாக மறுத்தோம். மன்னார் தீவு பகுதியில் முழுமையாக காற்றாலை அமைப்பதையும், கணிய மண் அகழ்வதையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கின்ற விடயங்களை நாங்கள் வலியுறுத்தினாலும் அவர்கள் அதனை சாதகமாக பரிசீலிப்பதற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இரண்டு வாரத்தில் ஜனாதிபதியை சந்தித்து குறித்த விடயத்தை முடிவுறுத்தலாம் என அமைச்சர்கள் கூறியுள்ளனர். தற்காலிகமாக இத்திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியை பார்க்கின்ற போது எமக்கு கவலையை ஏற்படுத்துகின்றது.

அவ்விதமான எந்த முடிவும் நேற்றைய(7) கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ஆலோசிக்கப்பட்டதே தவிர எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. குறித்த கூட்டம் முடிவின்றி முடிந்து போனது. கலந்துரையாடலில் கலந்து கொண்ட எங்களுக்கு எவ்வித திருப்தியும் இல்லை.

மன்னாரினுடைய உரிமை

அரசாங்கம் தாங்கள் நினைத்தபடி இனப்பிரச்சினை விவகாரத்தை எவ்வாறு கையாள்கின்தோ அவ்வாறு தான் அபிவிருத்தி திட்டங்களையும் கையாள முனைகின்றது. தான்தோன்றித்தனமாக இத்திட்டங்களை தாங்கள் நினைத்த படி செய்து முடிக்கலாம் என யோசிக்கின்றது.

இவ்விடயங்களில் மன்னார் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒன்று கூடி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஜனநாயக ரீதியாக அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை கொடுக்கும் வகையில் அணி திரளாது விட்டால் இத்திட்டங்களை எங்களினால் இதை நிறுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் | Resolution To Suspend Mannar Wind Farm Project

ஆபத்தான ஒரு நிலையை நோக்கி இத்திட்டங்களின் செயற்பாடுகள் நகர்ந்து கொண்டு செல்கிறது. சில கிராமங்களில் இதை செயற்படுத்துகின்ற நிறுவனங்கள் மக்கள் சிலருக்கும், அமைப்புகளுக்கும் சில சலுகைகளை வழங்கி அவர்களை விலைக்கு வாங்கி தமக்கு சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தி முயற்சிக்கின்றார்கள்.

எனவே, இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து ஜனநாயக ரீதியாக போராடி எங்களுடைய வாழ்வியல் இருப்பு உரிமையையும் வாழ்வாதார இருப்பையும் மன்னாரினுடைய உரிமையையும் பெற்றுக்கொள்வதற்கு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலதிக தகவல் - ஆசிக்

இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கிய சாமர! திரைக்குப் பின்னால் நடந்த உரையாடல்

ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கிய சாமர! திரைக்குப் பின்னால் நடந்த உரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US