5 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் நீதிமன்ற செயற்பாடுகள்
நீதிமன்ற நடவடிக்கைகளை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் U.R.D.சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
அன்றைய தினங்களில் சந்தேகநபர்கள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய அவசியிமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரிவுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.