விரைவில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்
பெட்ரோல் உட்பட எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை செய்ய செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் விரைவில் பெட்ரோல் உட்பட எரிபொருட்களின் வலைகளில் திருத்தங்கள் செய்யும் தினத்தை அறிவிப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளது.
எனினும் கடந்த 21 மாதங்களாக அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை செய்யாமல் இருந்தது.
தொடர்ந்தும் அரசாஙகத்தினால, பாரிய நஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடனை திருப்பி செலுத்த முடியாத ஆபத்தான நிலைமைக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சென்றுள்ளது ID 449874எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam