அரச நிறுவனங்களின் செலவுகளை கட்டுப்படுத்த கடுமையான தீர்மானம்
அரச நிறுவனங்களின் செலவுகளை கட்டுப்படுத்த கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளதாக தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்த சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
சுற்றுநிருபம் வெளியீடு
நிகழ்வுகள், அங்குரார்ப்பண நிகழ்வுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட அத்தியாவசியமில்லா அனைத்து விடயங்களுக்குமான செலவுகள் மட்டுப்படுத்தப்பட உள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றுமாறு அண்மையில் ஜனாதிபதியின் செயலாளரும் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இந்த அறிவுறுத்தல்களின் பின்னரும் தேவையற்ற செலவுகள் அரச நிறுவனங்களில் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.