அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
அரச அதிகாரிகள், ஓய்வுப் பெற்றுச் செல்லும்போது, அவர்களுக்கு அரசாங்கம் செலவில் பிரியாவிடை நிகழ்ச்சிகளை நடத்த திறைசேரி தடை விதித்துள்ளது.
செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட சில மூத்த அரச ஊழியர்கள், அரச செலவில் பிரியாவிடை நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கள் ஓய்வுநாளை அரசாங்க செலவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

விதிக்கப்பட்டுள்ள தடை
ஓய்வுப் பெறுபவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மின்சார உபகரணங்கள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை அரசாங்க பணத்தைப் பயன்படுத்தி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதற்கான தடையை திறைசேரி விதித்துள்ளது.
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65இலருந்து 60 ஆக மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் முடிவால் சுமார் 18,000 ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளனர்.

சுற்றறிக்கை
இந்த நிலையில், திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன , கடந்த வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் திறப்பு விழாக்கள், கடமைகளை பொறுப்பேற்கும் அதிகாரிகளின் செயல்பாடுகள், ஒன்றுகூடல் மற்றும் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு அரச பணத்தை பயன்படுத்தக்கூடாது என்று அவர் அறிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்கள
தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச
வங்கிகளின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri