குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை
குரங்கு அம்மை (மங்கி பெக்ஸ்) நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது.
உலகளவில், 72 உயிரிழப்புகள் உட்பட 3,100க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
விஞ்ஞானிகள் தற்போதைய குரங்கு அம்மை என்ற பெயரை “பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது” என்று விமர்சித்த பிறகு, “உலக சுகாதார நிறுவனம், நிபுணர்களுடன் இணைந்து, குரங்கு அம்மை வைரஸின் பெயர்களை மாற்றுவது மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் பெயரை மாற்றுவது குறித்து செயல்பட்டு வருகிறது” என்று உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வைரஸ் தொற்று விரைவில் புதுப்பெயரில் அழைக்கப்படும் எனத் தெரிகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,