மதுபான நிலையங்களை 10 மணிவரை திறக்க வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
மதுபான நிலையங்களை இரவு 10 மணிவரை திறந்து வைக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது பல்பொருள் அங்காடிகளுக்கு பியர் விற்பனை உரிமம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (21.09.2022) இடம்பெற்ற அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின்போதே, அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ''நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மனோபாவத்தில் மாற்றம் அவசியம். கஞ்சா என்பது வெறுமனே வீதியில் பாவித்து சுற்றித்திரியும் போதைப்பொருளல்ல'' என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri