கோட்டாவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்குமாறு கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கடந்த காலங்களில் நாட்டில் சகல விடயங்களிலும் நேரடியான தீர்மானங்களை மேற்கொண்டதால் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.
கால அவகாசம்
அவர்கள் எங்கள் தலைவர்கள். அவர்களின் உயிர் ஆபத்தில் இருப்பது குறித்து நாம் அஞ்சுகிறோம்.
கடந்த காலத்தில், இவை அனைத்திற்கும் எதிராக தைரியமாகவும் நேரடியாகவும் முடிவுகளை எடுத்த தலைவர்களை தற்போது சாடாதீர்கள்.
நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை கோட்டாபயவிற்கு வழங்கி அவருக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுங்கள். அவர் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து காட்டுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
