முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.வீடுகளை விட்டு வெளியில் வருவதை நிறுத்த வேண்டும். பாரிய பரவலாக கோவிட் தொற்று வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.உங்களையும் உங்கள் குடும்பத்தினையும், சமூகத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில் தான் இருக்கின்றது என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் முல்லைத்தீவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோவிட் நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அராசங்க அதிபர் க.விமலநாதன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றியவர்களுக்கு கோவிட் தொற்று இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு கடமையாற்றிய 926 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு,முள்ளியவளை,புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு வாழ்கின்ற மக்களை வினையமாக வேண்டிக்கொள்கின்றோம் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றுபவர்களின் குடும்பங்கள் கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுகின்றார்கள். மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தி வைத்துக்கொண்டு மேலும் பி.சி.ஆர் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இனம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் இதில் கவனமாக இருக்கவேண்டும். வீடுகளை விட்டு வெளியில் வருவதை
நிறுத்த வேண்டு.ம் இது ஒரு பாரிய பரவலாக வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால்
மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.உங்களையும் உங்கள்
குடும்பத்தினையும் ,சமூகத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில் தான்
இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
