கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஆசிரியர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில், நிகழ்நிலை வகுப்புகளில் இருந்து விலகி இருக்கும் ஆசிரியர்கள், ஸூம் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பரிசீலிக்குமாறு, கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது.
தேசத்தின் எதிர்காலத்தைக் கையாளும் திறமைமிக்க பிள்ளைகளை உருவாக்கும் கடமையை நினைத்து, ஸூம் வகுப்புகளை மீண்டும் தொடங்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆயர்கள் மாநாடு, ஆசிரியர்களிடம் கோரியுள்ளது.
அதே நேரத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை சீர் செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக ஆயர்கள் மாநாடு தமது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
எதிர்காலத்தில் பிள்ளைகளை பயனுள்ள குடிமக்களாக வடிவமைப்பதில் ஆசிரியர்களே அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்றும் கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு தெரிவித்துள்ளது.