முடிந்தால் இதை செய்யுங்கள்! - நிதி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

Money Basil Rajapaksa
By Murali Dec 10, 2021 08:58 AM GMT
Report

அடுத்த வருட இறுதிக்குள் வெளிநாடுகளில் கொண்டுவரப்படும் பால்மாவுக்காக செலவிடப்படும் நிதியை முடிந்தால் மீதப்படுத்தி தாருங்கள் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் பசுமை விவசாயம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “இம்முறை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நான் கருதுகின்றேன்.

தற்போது நமது நாட்டில் அந்நிய செலாவணி பற்றாக்குறை உள்ளது. எங்களின் கையிருப்பில் இருந்த நிதியை அத்தியாவசிய உணவு, மருந்து, எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்கும் செலவு செய்தோம்.


குறிப்பாக கடந்த ஓராண்டில் நாட்டிற்கு வரும் அந்நிய செலாவணி கணிசமாக குறைந்துள்ளது. சமீப காலங்களில், ஒவ்வொரு ஆண்டும் 130,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த ஆண்டு 53,000 ஆக குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு அதை 300,000 ஆக உயர்த்த முயற்சிக்கிறோம். இந்த ஆண்டு நமது நாட்டு மக்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவுகளை உற்பத்தி செய்ய பெரும் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

பால் மா இறக்குமதியை நிறுத்தவும், நாட்டில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன். இந்த ஆண்டு வளர்ச்சி சார்ந்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளோம்.

அரசாங்க அதிபர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 85,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகள், நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதிகள் அனைத்தையும் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவோம் என நம்புகிறோம். எந்த நேரத்திலும் கூடுதல் பணம் பெற முடியாது. புதிய வாகனங்கள் அல்லது பணியாளர்கள் பெற அனுமதி வழங்க முடியாது.

இந்த நாட்டில் பெருமளவிலான அரச ஊழியர்கள் உள்ளனர். சில பிரதேச செயலகங்களில் போதிய மேசை கதிரைகள் கூட இல்லை.

எனவே, இந்த மனித வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி நாட்டை பாலில் தன்னிறைவு அடையச் செய்யவும், பால் மாவுக்காக செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிக்கவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள அனைவரின் ஆதரவையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US