மதுபான விற்பனையகங்கள் திறக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை
மதுபான விற்பனையகங்கள், திறக்கப்பட்டமை குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர கோரியுள்ளார்.
ஊடகங்களுக்கு செவ்வியளித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதுபான விற்பனையகங்களை திறக்க, மதுவரி ஆணையாளருக்கு தெரியாமல் உத்தரவிடபட்டது என்பதை ஏற்க முடியாது.இந்த சம்பவம் பற்றி தனக்கு ஊடகங்கள் மூலமே தெரியவந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊரடங்கு உத்தரவு இருக்கும் போது மது விற்பனையகங்களை திறப்பது பொருத்தமானது என்று கூற முடியாது.
இந்த நிலையில் நிதி அமைச்சகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், என்ன தவறு நடந்தது என்பது குறித்து முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.