திருகோணமலை கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் கவனம் எடுக்க வேண்டும் என கோரிக்கை
பருவகால அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சம்பூர், கல்லடி, உப்பூறல், குச்சவெளி, புல்மோட்டை, திருகோணமலை 10ம் குறிச்சி, சல்லி ஆகிய கரையோர கடற்தொழிலாளர்கள் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியிட்ட தனது ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
அதில் மேலும், இப்பிரதேசத்தை அண்டிய கடற்தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களும் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பகுதி கடற்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தில் உடன் கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |