பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்ட தகவல்
பொலிஸ் தலைமையகத்திற்கு அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலானமாணவர் ஒன்றியம் மற்றும் கோட்டகோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்கபுஷ்பிகா கொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த அவரை, கோட்டை பகுதியில் வைத்து, நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத குழுவினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
கடத்தப்பட்ட செய்தியில் உண்மையில்லை
எனினும், அவர் கடத்தப்பட்ட செய்தியில் உண்மையில்லை என கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், அவர் கோட்டை பொலிஸாரால் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வின் கொழும்பு தெற்கு பிரிவு
பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 8 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
