நாணய நிதியத்தின் அறிக்கை நாடாளுமன்றத்திற்கு
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வழங்கியுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாணய நிதியத்தின் இந்த அறிக்கையை அமைச்சரவை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க கூறியுள்ளார். அமைச்சரவை ஆய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் ஆலோசனையுடன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது உட்பட பல ஆலோசனைகளை உள்ளடக்கி சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையை தயார் செய்துள்ளதுடன் அதனை அண்மையில் அரசாங்கத்திடம் கையளித்தது.