மதுவரி திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு
அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன் அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20 சதவீத அதிகரிப்பு காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் மது அருந்துதல் 8.3 மில்லியன் லீட்டர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.
வரி அதிகரிப்பு
மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டுடனான வரி அதிகரிப்பு தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிகரெட்டுகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்த வரி வருமானம் 7.7 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் ரூபா வரையில் குறைந்துள்ளதாகவும் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri