மதுவரி திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு
அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன் அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20 சதவீத அதிகரிப்பு காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் மது அருந்துதல் 8.3 மில்லியன் லீட்டர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.
வரி அதிகரிப்பு
மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டுடனான வரி அதிகரிப்பு தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிகரெட்டுகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்த வரி வருமானம் 7.7 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் ரூபா வரையில் குறைந்துள்ளதாகவும் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
