யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலவர அறிக்கை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 20,732 குடும்பங்களைச் சேர்ந்த 69,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தின நிலவர அறிக்கைப்படி, (29.11.2024) நண்பகல் 12.00 மணி வரை இந்த எண்ணிக்ககையிலான பாதிப்புக்கள் பதிவிடப்பட்டுள்ளன.
பல வீடுகள் சேதம்
இதற்கமைய, 04 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 178 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும், 79 பாதுகாப்பு நிலையங்களில் 2,136 குடும்பங்களைச் சேர்ந்த 7,342 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ். கொடிகாமம் - தவசிகுளம் பகுதியில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அந்த மக்களுக்கான உடனடி உலருணவு உதவிகளையும் அவர் வழங்கி வைத்தார்.




சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam