விமானத்தில் மோசமாக செயற்பட்ட யாழ். நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணை தகாத முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் இலங்கையரான கப்பல் மாலுமியை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டார்.
விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசபாபதி குஷாந்தன் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
டுபாயில் இருந்து திரும்பும் போது தென்னாபிரிக்காவைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணை சந்தேக நபர், தகாத முறையில் துன்புறுத்தியதாக விமான நிலைய பொலிஸார் நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.
விளக்கமறியல்
இந்த நிலையில் சர்வதேச அளவில் அவதூறு ஏற்படுத்திய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தகவல்களை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்த நீதவான், வழக்கை 5 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என நீதவான் தனுஜா லக்மாலி குறிப்பிட்டுள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 18 மணி நேரம் முன்

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா-னு டைட்டில் மாத்திடுங்க.. சின்ன மருமகள் சீரியல் ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள் Cineulagam

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
