விமானத்தில் மோசமாக செயற்பட்ட யாழ். நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணை தகாத முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் இலங்கையரான கப்பல் மாலுமியை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டார்.
விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசபாபதி குஷாந்தன் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
டுபாயில் இருந்து திரும்பும் போது தென்னாபிரிக்காவைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணை சந்தேக நபர், தகாத முறையில் துன்புறுத்தியதாக விமான நிலைய பொலிஸார் நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.
விளக்கமறியல்
இந்த நிலையில் சர்வதேச அளவில் அவதூறு ஏற்படுத்திய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தகவல்களை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்த நீதவான், வழக்கை 5 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என நீதவான் தனுஜா லக்மாலி குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan