விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டவை எனக்கூறப்படும் தங்க நகைகளை சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது மீட்கப்பட்டு புலனாய்வு பணிப்பாளர் சபையில் வைக்கப்பட்டுள்ள குறித்த தங்க நகைகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் அந்த நகைகளை தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பிச் சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam