வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம்
குவைட்டில் கொலை செய்யப்பட்ட வீட்டுப் பணிப்பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பெண் கடந்த 2019ஆம் ஆண்டு குவைட்டுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி இந்தப் பெண் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரின் கத்தி குத்துக்கு இலக்காகியே இந்தப் பெண் உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் சடலம் நேற்றைய தினம் கட்டார் விமான சேவை நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாகவும் நேற்றைய தினம் நீதிமன்ற விசாரணை நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan