வவுனியாவில் சஜித்தின் பிரசாரக் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மதத் தலைவர்கள் : எழுந்துள்ள சர்ச்சை
வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத குருமார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவினது தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (03) வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பிரதான மேடை
குறித்த கூட்டத்தின் பிரதான மேடையில் மதத்தலைவர்ககளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு அவர்களும் அமர்ந்திருந்தனர்.
பொதுக் கூட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த நான்கு மதங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட போதும் பௌத்த மதகுரு, இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.அவர்கள் எவரும் பிரதான மேடையில் காணப்படவில்லை.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மௌலவிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மதத்தலைவர்கள் அமரும் இடத்தில் இருந்ததுடன், ஒரு மௌலவி உரையாற்றியும் இருந்தார்.
ஆனால் ஏனைய மதத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என அங்கு கலந்து கொண்டு ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
