அதிகாரிகளை கடுமையாக எச்சரித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர்
அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தும் மாவட்ட செயலாளர்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சமன் ஏக்கநாயக்க இவ்வாறு எச்சரித்துள்ளார்.
நிவாரண வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தும் அனைத்து முக்கிய பொறுப்புள்ள அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மக்கள்
பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை சில குழுக்கள் தாமதப்படுத்துவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.

நிவாரண திட்டத்தை பெறாதவர்களுக்கான மேல்முறையீடுகள் மற்றும் புதிய பதிவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், கொடுக்கப்பட்ட இலக்கில் ஒரு சில மாவட்ட செயலாளர்கள் 100% பூர்த்தி செய்துள்ளதாகவும் மற்றொருவர் 20% இலக்குடன் பூர்த்தி செய்துள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனி இடம்பெற கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan