அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் மாலுமிகள் விடுதலை.!
அமெரிக்க அதிகாரிகளால் கடலில் வைத்து சிறைபிடிக்கப்பட்ட 'லெனோர்/டவினா' (Lenore/Davina) கப்பலைச் சேர்ந்த 22 ஈரான் மாலுமிகள் பாகிஸ்தானின் கராச்சி நகரை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான கடல்சார் வர்த்தகத் தடையின் போது இந்த மாலுமிகள் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.
வெளியுறவு அமைச்சு தகவல்
இது குறித்துப் பேசிய இஷாக் தார், "விடுவிக்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்குப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் திரும்புவதை உறுதி செய்ய பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இறுதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.

மேலும், கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானின் இடைவெளியீட்டு முயற்சியால் தாயகம் திரும்பும் ஈரானிய மாலுமிகளின் நான்காவது குழு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.