ATA நிறைவேற்றப்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சிக்கல்

Missing Persons Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan political crisis
By Renuka Jun 02, 2023 11:05 AM GMT
Report

அரசாங்கத்தினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் தாய்மார்களுக்கும் பாதகமாக அமையும் எனப் போரினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பயங்கரவாத தடைச் சட்டத்தை இயற்றுவது என்பது, ஜனநாயக போராட்டத்தைச் செய்து வருகின்ற எமக்குப் பாதகமாக அமையும் என்பதாலும், நாம் எமது உரிமைகளைக் கேட்க முடியாது என்பதாலும் இந்த புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் இந்த நாடாளுமன்றத்திலே இதனை நிறைவேற்றக்கூடாது என்பதையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.” 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகச் சொன்ன அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (ATA) உருவாக்க முயற்சிப்பதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டாகவோ அல்லது தனியாகவோ போராடுபவர்களுக்கு இந்த சட்டம் தடையாக அமையுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ATA நிறைவேற்றப்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சிக்கல் | Relatives Of The Disappeared


பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் ஆர்வமுள்ள தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து அதனை மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ச கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இலங்கையின் மிக நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் அரசாங்கம் ஆலோசனை நடத்தியதாகத் தெரியவில்லை.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் மூலம் தொழிற்சங்க உரிமைகள், ஊடக உரிமைகள், போராட்டங்கள் நசுக்கப்படும் என சிலர் கூறி மக்களைத் தவறாக வழிநடத்துவதாக, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், புதிய சட்டமூலத்தை விமர்சிப்பவர்கள் திருத்தங்களுக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றம் சுமத்தினார். 

ATA நிறைவேற்றப்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சிக்கல் | Relatives Of The Disappeared

சட்டமூலத்தை உடனடியாக நிறுத்து

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி 2,291ஆவது நாளான நேற்று முன்தினம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தாய்மார்கள், போர்க்குற்ற விசாரணைக்கான உள்நாட்டு பொறிமுறையை நிராகரிப்பதாகவும், சர்வதேச விசாரணையையே கோருவதாகவும் மீண்டும் வலியுறுத்தினர்.

"பயங்கரவாத எதிர்ப்பு" சட்டமூலத்தை உடனடியாக நிறுத்து! புதிய சட்டங்களைத் திணித்து மக்களின் குரலை நசுக்காதே! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

யுத்தத்தின் இறுதி நாட்களில் பாதுகாப்புப் படையினர் பொறுப்பேற்ற பின்னர், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கோரி, 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டங்கள் தற்போது 2,300 நாட்களை நெருங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US