காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: யாழில் கண்டன பேரணிக்கு அழைப்பு
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது அதனை எதிர்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன்போது அவர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் தொடர்பான கலந்துரையாடல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின் தலைமையில் இன்றையதினம் காலை 10 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கலந்துரையாடலுக்குப் பின்னர் கண்டனப் பேரணி தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் அ.லீலாவதி கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கும் கண்டனப் பேரணி முற்றவெளியில் நிறைவடையும்.
இந்த பேரணியில் கட்சி மற்றும் அரசியல் ரீதியான வேறுபாடுகளைக் கடந்து இந்த
போராட்டத்தை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
