பிணை வழங்கப்பட்டும் தொடர்ந்து சிறையில் வாழும் முன்னாள் அரசியல் கைதி
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனுக்கு பிணை வழங்கப்பட்டும் தற்போது தொடர்ச்சியாக சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த யூலை மாதம் (07) பிணை வழக்கப்பட்டும் தற்போது தொடர்ச்சியாக சிறையில் இருக்கின்றார்.
2024 மார்ச் மாதம் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் முகநூலில் பதிவுகள் இட்டதாகக் கூறி பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முகநூல் பதிவு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
குற்றச்சாட்டு
தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த யூலை மாதம் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தது.

ஆனால் பிணை வழங்கப்பட்ட அன்றையதினமே வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை இடம்பெற்ற நிலையில் (25.07.2025) அன்று வேறு வழக்கு திகதியிடப்பட்டு அந்த வழக்கு (05.08.2025) திகதி இடம்பெற்ற நிலையில் மீண்டும் சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் அல்லது அரசியல் தலைமைகள் கவனத்தில் கொண்டு விடுதலை செய்ய முன்வர வேண்டும் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri