மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் போட்டியில் மோதல்(Photos)
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் எற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியின் இறுதி சுற்று போட்டி முடிவில் இடம்பெற்ற மோதலில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இறுதி சுற்று நேற்றைய தினம்(3) மாலை -மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மைதானத்தில் மோதல்
குறித்த போட்டியானது ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதன் போது அயிலன் FC அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி முடிவடைந்த நிலையில் சில நபர்களுக்கிடையில் மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து பாரிய மோதலாக இடம்பெற்றது.
நீண்ட நேரத்தின் பின்னர் மோதல் தனித்த நிலையில் பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்று போட்டியாளர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.
வைத்தியசாலையில் அனுமதி
எனினும் போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் பள்ளி முனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என பலர் மைதானத்தைச் சூழ்ந்த பகுதிகளில் நின்ற போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வந்த பொலிஸார் வீதியில் சென்றவர்கள் மற்றும் மைதான பகுதிகளில் நின்றவர்களை தடியினால் தாக்கியதாக குற்றம் சுமத்தியதோடு,பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சினை முடிந்து நீண்ட நேரத்தின் பின்னர் பொலிஸார் வந்து மக்கள் மீது தாக்கியதை மக்கள் உண்மையாக கண்டித்துள்ளனர்.
மேலும் குறித்த மோதலின் போது காயமடைந்த 2 பேர் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan