அவுஸ்திரேலியாவில் அகதிகள் தொடர்பிலான நேர்காணலை அறிவித்துள்ள அரசு

Australiya
By Dhayani May 12, 2021 10:58 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலணைக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் திடீரென இரண்டு வாரங்களில் நேர்காணல் எனும் அறிவிப்பு ‘போதுமான காலமல்ல’ என அகதிகளின் வழக்கறிஞர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை பரிசீலணை வேகப்படுத்தப்பட்டுள்ளதனால், அந்நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த பல அகதிகள் அவுஸ்திரேலியா உள்துறையுடனான இந்த நேர்காணல்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரியுள்ள இந்த அகதிகள் ‘அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கப்படுவார்களா? இல்லையா?’ என்பதை தீர்மானிக்கப் போகும் முக்கியமான நேர்காணல் இதுவாகும்.

இந்த நேர்காணல்களை எதிர்கொள்ளப்போகும் அகதிகள் பலர் மொழிப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினைகளை சந்திப்பார்கள் என்றும் நேர்காணலுக்கு தயாராவதற்கு யாரிடம் உதவிக் கேட்பது எனத் தெரியாமல் தவிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு குழந்தைகளின் தாயான ஓர் அகதி எட்டு ஆண்டுகளாக தனது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்காக தான் காத்திருப்பதாக தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்திடம் தெரிவித்திருக்கிறார்.

“தற்போது எனக்கு கடிதம் அனுப்பினார்கள், அதுவும் ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் எனக்கு நேர்காணல் என எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு வழக்கறிஞர் இல்லை, வழக்கறிஞருக்கு செலுத்த என்னிடம் பணமில்லை. நேர்காணலுக்கு தயாராவதற்காக எனக்கு உதவித் தேவைப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் என்னால் எதுவும் யோசிக்கக்கூட முடியவில்லை,” என அவர் கூறியிருக்கிறார்.

எதிர்வரும் ஜூன் 30ம் தேதிக்குள் 1200 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான முதல் கட்ட நேர்காணல்களை முடிக்க அவுஸ்திரேலியா உள்துறை திட்டமிட்டுள்ளதாக சமூக சட்ட மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், அவுஸ்திரேலியா மாநிலங்களான நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் உள்ள சட்ட மையங்களில் பெருமளவிலான அகதிகள் உதவிக்கோரியிருப்பதாக Refugee Advice & Casework Service (RACS) அமைப்பு தெரிவித்துள்ளது.

திடீரென வேகப்படுத்தப்பட்டுள்ள தஞ்சக்கோரிக்கை பரிசீலணைக் காரணமாக வழக்கறிஞர்களின் தேவை அதிகரித்துள்ளதால் அகதிகளுக்கு சட்ட உதவிக்கிடைக்காமல் போகக்கூடும் என சட்ட உதவி மையங்கள் தெரிவித்துள்ளன.

சட்டவிரோத கடல் வருகையின் மூலம் வந்தவர்கள் 2017 அக்டோபர் 1ம் தேதிக்குள் தங்கள் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் கூடுதல் தகவல்களை சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரிடம் கேட்கலாம்.

திட்டமிடப்பட்ட நேர்காணல் தொடர்பாக 14 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. அதனடிப்படையில் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக உள்துறை சம்பந்தப்பட்ட தஞ்சக்கோரிக்கையாளருக்கு நேர்காணல் திகதியை அறிவுறுத்தியுள்ளது என அவுஸ்திரேலியா உள்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US