இலங்கையில் சீர்திருத்த வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி அழைப்பு
இலங்கையில் சீர்திருத்தங்கள் வெற்றிபெற வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது.
உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் வோஷிங்டனில் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக வங்கி குழு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் நிதி மற்றும் பொருளாதார நிர்வாக சீர்திருத்தங்களில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முழு மீட்பு முயற்சிகள் வளர்ச்சியடைய வேண்டும். அவற்றை உலக வங்கி குழு ஆதரிக்கும் என்றும் உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு சீர்திருத்தம்

மேலும், பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான சமூகப் பாதுகாப்பு சீர்திருத்தம் உட்பட, சீர்திருத்தங்கள் வெற்றிபெற அதிகரித்த வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri