கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்த யாப்பு சீர்திருத்தம் (Photo)
தேசிய கடற்தொழில் மகா சம்மேளனத்தின் யாப்பினை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
தேசிய கடற்தொழில் மகா சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (25.10.2022) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக குறித்த சம்மேளனத்தின் யாப்பு சீர்திருத்தம் செய்யப்படாத நிலையில் கால சூழல் மாற்றங்களுக்கு அமைய கடற்தொழில்சார் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் யாப்பு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சங்கங்களின் கட்டமைப்புக்கள்
இந்நிலையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்ற யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் நோக்கிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிராமிய கடற்தொழில் சங்கங்கள் பெயரளவிலான சங்கங்களாகள் வினைத் திறனான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் காலத்துக்கு காலம் யாப்பு மாத்திரமன்றி சங்கங்களின் கட்டமைப்புக்களும் புதியவர்கள் உள்வாங்கப்பட்டு மெருகூட்டப்பட வேண்டும் என்ற கருத்தது அமைச்சர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
யாப்பு சீர்திருத்தம்
அத்துடன் மாவட்ட ரீதியான கிராமிய கடற்தொழில் சங்கங்களிடம் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவித்த அமைச்சர்கள் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் உள்வாங்கி யாப்பு சீர்திருத்தம் பூரணப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்க, கடற்தொழில் திணைக்களம் உட்பட்ட கடற்தொழில்சார் திணைக்களங்களின் பிரதாணிகள், கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் மாவட்ட ரீதியான பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
