அர்ச்சுனாவுக்கு சிவப்பு அறிவித்தல்! மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அதிரடி முடிவு
வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் பெரியவிளான் பகுதியில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(20.02.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பெரியவிளான் வட்டார உறுப்பினரான எட்வேட் மரியவாசினி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாம்புகளால் அச்சுறுத்தல்
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பெரியவிளானில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. அங்கிருந்து பாம்புகள் வெளியே வந்து அருகில் இருக்கின்ற மக்களின் குடிமனைகளுக்குள் செல்கின்றது. இதனால் மக்கள் தினம் தினம் அச்சத்தில் வாழ்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் சுமாராக ஏழு பாம்புகள் அங்கிருந்து வெளி வருகின்றன. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.
சிவப்பு அறிவித்தல்
அதற்கு பதிலளித்த தவிசாளர் க.ஜெசீதன், பாதீனியம் உள்ள எத்தனை காணிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, யாழ். சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனின் கழுத்தை நெரிப்பதுபோல் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
ஆனால் ஊருக்கடி உபதேசம் உனக்கில்லையடி கண்ணே என்பது போல செயற்படுகின்றார். உண்மையிலேயே இது முன்னுதாரணத்துக்கு பிழையான ஒரு விடயம்.

நாடாளுமன்றம் என்றால் இதுவரை என்ன என்று மக்களுக்கு தெரியாது என்றும், தான்தான் அதனை வெளிப்படுத்தியவர் என்றும் அர்ச்சுனா நினைக்கிறார்.
இவ்வாறு இருக்கையில், மக்களுக்கு இடையூறாக காணியை வைத்திருப்பது தவறான விடயம். அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்காக விடப்போவதில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை அவரது காணிக்கான சிவப்பு அறிவித்தலை காட்சிப்படுத்தப் போகின்றோம் என்றார்.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri