கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்
சீரற்ற வானிலை காரணமாக கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை
அதன்படி, கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கும் மற்றும் இக்கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மறு அறிவிப்பு வரும் வரை கடல் பகுதிகளுக்குள் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.