கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை ஆசிரியர் சேவையில் தேசிய கற்பித்தல் அறிவியல் டிப்ளோமா பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
2020/2022 கல்வியாண்டில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பாடநெறிகளை முடித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான தகவல் சேகரிப்பு இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவை
அதன்படி, ஆசிரியர் சேவையில் தேசிய கற்பித்தலுக்கான புலமைப்பரிசில் பெறுபவர்கள் நேற்று (20) முதல் எதிர்வரும் (28) நாட்கள் வரை teacher.moe.gov.lk என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .

இது தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 4 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam